Saturday, 26 November 2016

родிро░ு роиро░ேрои்родிро░ рооோроЯிропிрой் роЪொрод்родு роородிрок்рокு !!!

மோடியின் சொத்து மதிப்பு !!!

       குஜராத்தில் 13 ஆண்டுகள்
முதல்வராக பணியில் இருந்த
போதும், அங்கு நரேந்திர
மோடி 'ஒரு துறவி போன்றே'
வாழ்ந்தார். சொந்த
பந்தங்களை தேடிச்சென்று சந்திப்பது இல்லை.
உறவினர்களும், முதல்வர் அலுவலகம்
வருவது இல்லை.
அதிகாலை 5 மணிக்கே எழுந்து யோகா செய்வது,
பத்திரிகைகள் படிப்பது, லேப்டாப்பில் மின்னஞ்சல்
பார்ப்பது என்று தான்
அவரது அதிகாலை பொழுது விடிந்தது.ஒரு நாள்
கூட விடுப்பு எடுத்தது இல்லை. ஓய்வெடுக்க
எங்கும் சென்றது இல்லை.
கட்சி அல்லது ஆட்சி என்று தான் அவரது நாட்கள்
நகர்ந்தன.ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளிடமும்,
கடைநிலை ஊழியர்களிடம் ஒரே மாதிரி பழகும்
குணம் கொண்டவர்.
டில்லிக்கு கிளம்புவதற்கு முன்பு, 'பிரதமர்
இல்லத்தில் பணி புரிய
யாராவது விரும்புகிறீர்களா'
என்று தனது டிரைவர்கள், உதவியாளர்கள்,
சமையலாளர்களை கேட்டார் மோடி. பலரும்
விருப்பம் தெரிவித்தனர். எனினும், எல்லோரையும்
அழைத்து வர முடியாது என்பதால், சமையல்காரர்
உட்பட சிலரை மட்டும்,
டில்லிக்கு அழைத்து வந்தார் மோடி.
ஒரு குடும்ப
உறுப்பினரை வழி அனுப்புவது போல், முதல்வர்
அலுவலக ஊழியர்கள், அமைச்சர்கள்
மோடியை வழி அனுப்பினர். முதல்வர்
அலுவலகத்தில் தான் பயன்படுத்தி வந்த
சிவப்பு நிற பேனாவை, அங்கு முதல்வராக
பொறுப்பேற்ற ஆனந்தி பென்னிடம்
வழங்கி வாழ்த்தினார். பேனாவை பெற்றுக்கொண்ட
ஆனந்தி பென், துக்கம் தாங்காமல் அழுதார்
என்கிறார் குஜராத்
அதிகாரி ஒருவர்.பதிமூன்று ஆண்டுகளில்,
முதல்வர் பணியில் கிடைத்த ஊதியத்தை,
முதல்வர் அலுவலக கடைநிலை ஊழியர்களின்
எதிர்கால படிப்புச் செலவிற்கு வழங்கி விட்டார்.
இதுவரை கிடைத்த
நினைவுப்பரிசுகளை அரசு இல்லங்களுக்கு அளித்து விட்டார்.
கூட்டங்களில் கிடைக்கும் சால்வைகளை,
அவ்வப்போது பொது இடங்களில் 'முதல்வர்
சால்வை' என்ற பெயரில் ஏலமிட
ஏற்பாடு செய்வது மோடியின் வழக்கம். அதில்
கிடைக்கின்ற
தொகையை அனாதை இல்லங்களுக்கு வழங்கி விடுவார்.டில்லி 7,ரேஸ்கோர்ஸ்
ரோடு, பிரதமர் இல்லத்திற்கு இன்னும் சில
நாட்களில் குடியேறப் போகும் பிரதமர் மோடி,
ஆமதாபாத்தில் இருந்து எடுத்து வந்த 'சொத்து'
என்ன தெரியுமா? ஒரு லேப் டாப், ஐ பேட் மற்றும்
5 செட் டிரஸ்! கூடவே விவேகானந்தர் தொடர்பான
சில புத்தகங்கள்.இந்தியாவின் எதிர்காலம்
தொடர்பான, 120 கோடி மக்களின் அபரிதமான
நம்பிக்கையை சுமந்து கொண்டு, பிரதமர்
நாற்காலியில் நேற்று காலையில்
அமர்ந்து பணியை துவங்கினார் மோடி! மோடி-
மோடியாகவே! வித்தியாசம், அன்று முதல்வர்...
இன்று பிரதமர்.இனி, தினமும்
அதிகாலையிலேயே எழுந்து பணியை துவக்குங்கள்
என்று சக அமைச்சர்களையும்
கேட்டுக்கொண்டார்.
#Nnsmodi
#Nnsindia

ஆதாரம்

http://www.dinamalar.com/news_detail.asp?id=985133

படித்துவிட்டு பகிருங்கள்...

роХுро░ுроЩ்роХிро▓ிро░ுрои்родு рооройிродрой் ро╡рои்родாрой் роОрой்ро▒ாро▓் роЗрок்рокோродு роПрой் роХுро░роЩ்роХுроХро│் роЗро░ுроХ்роХிрой்ро▒рой ?

"டார்வின் தியரி" தவறு என்றும்.
குருங்கிலிருந்து மனிதன் வந்தான் என்றால் இப்போது ஏன் குரங்குகள் இருக்கின்றன ?

என்றும்,  கிறிஸ்துவர்கள் பலர் கேட்கிறார்கள்
அல்லது அப்படி ஒரு கேள்வியை மனதில் வைத்திருக்கிறார்கள். 

   ஏனென்றால் டார்வினின் பரினாம கோட்பாடு
"பைபிளின்" பல கூற்றுகளை உடைத்து போட்டு விட்டதுதான் காரணம்.

பரினாம தத்துவ‌த்தின் அடிப்படைகள் தெரியாமல் கேட்கப்படும் ஒரு தவறான‌ கேள்வி இது.  
முதலில் பரினாம வளர்ச்சி என்று சொல்வ‌தே தவறானது.

இது கீழ் இருந்து மேல் நோக்கி நடக்கும் வளர்ச்சி அல்ல சொல்லப்போனால் இதை ஒரு
"உயிர் பிழைப்பதற்கான‌ மாற்றம்" என்று கொள்ளலாம்.  எண்ணிலடங்காத உயிரனிங்கள் எந்த மாற்றமும் கொள்ளாமல் இன்னும் அப்படியே இருப்பதும் உண்டு.  அதனால் தான் இன்னும் கூட பூமியில் "அமீபாக்களும்"  இருக்கின்றன.     

குர‌ங்குகள் மனிதர்கள் ஆனார்கள் என்றால் அதை வளர்ச்சி என்று எல்லாவிதங்களிலும் நாம் ஏற்றுக் கொள்ள இயலாது.  அறிவுத்திறனை நாம் அடிப்படையாக கொண்டு பார்த்தால் அது "வளர்ச்சி".  ஆனால் "மரங்களில் வாழும் திறனை" அடிப்படையாக கொண்டாலோ,  "மரம் விட்டு மரம் தாவும்" திறனை அடிப்படையாக கொண்டாலோ அது "வீழ்ச்சி". 

பரினாம தத்துவம் என்பது தனி மனிதர்களுள் ஏற்படுவது அல்ல,  மாறாக அது கூட்டாக பல நூறு ஆண்டுகளாக ஏற்படும் ஒரு மாற்றம்.  

என்னிடம் விவாதிக்கையில் ஒரு கிறிஸ்துவர் கேட்டார் "குரங்குகள் மனிதர்களாக மாறினார்கள் என்றால், 
ஏன் இப்போதுள்ள குரங்குகள் மனிதர்களாக மாறுவது இல்லை?" 
நான் அவரை திரும்பிக் கேட்டேன் பாதிரிகள் பலான வேளைகளில் ஈடுபடுகிறார்கள் என்றால் ஏன் இன்னும் பல பாதிரிகள் அவ்வாறு ஈடுபடுவது இல்லை? 
கேள்வி அவருக்கு வருத்தத்தை கொடுத்திருந்தாலும் அவரை யோசிக்க வைத்தது.  பிராடஸ்டன்டுகள்,  கத்தோலிக்கர்களிடம் இருந்து வந்தார்கள் என்றால் ஏன் இன்னும் கத்தோலிக்கர்கள் இருக்கிறார்கள் ? 

    யேசு மண் துகளில் இருந்து மனிதனை படைத்தார் என்றால் ஏன் இன்னும் மண் துகள்கள் இருக்கின்றன  ?  

இந்த‌ கேள்விகளில்தான் பதில்களும் இருக்கின்றன.

பரினாம தத்துவம் என்பது நாம் நினைப்பது போல் ஒரு
"லீனியர்" (நேர் கோடான)  மாற்றத்தை குறிப்பது அல்ல...
அது ஏதோ ரேண்டமாக (எதேச்சையாக) உருவாவதும் அல்ல,   அதே வேளையில் "ரேண்டமான" சூழ்நிலைகளால் பாதிப்புக்கு உள்ளாகிறது.
  நான் முன்பே குறிப்பிட்டது போல் இது கீழ்மட்டத்திலிருந்து மேல் மட்டத்திற்கான மாற்றம் இல்லை அது.  ஏனென்றால் எது கீழ் மட்டம் எது மேல் மட்டம் என்பது நாம் அடிப்படையாக எடுக்கும் அளவுகோலை சார்ந்து இருக்கிறது.

என்னை பொறுத்தவரை டார்வின் தியரி ஒரு அற்புதமான கோட்பாடு.  உயிரினங்களில் மாற்றம் ஏற்படுவதை குறித்து கூறுகையில் "செலக்டிவ் ப்ரீடிங்கால்" ஏற்பட்ட‌ மாற்றத்தை குறிப்பிடுவார்கள் ஆய்வாளர்கள்.  உதாரனத்திற்கு மனிதர்கள் ஓநாய்களிடம் இருந்து சிறந்தவற்றை தேர்வு செய்து தன்னோடு வளர்த்து வந்து அது இன்று நாய்களாக மாறிய மாற்றத்தை குறிப்பிடுவார்கள்.  இதைதான் வேற்றுகிரக வாசிகள் நம்மிடம் செய்தார்கள் என்று நான் உறுதியாக நினைக்கிறேன்.    மகாபாரதம் போன்ற போர்களில் ஈடுபட்ட பிரபஞ்ச சக்திகள் நம்முள் பல மாற்றத்தை ஏற்படுத்தி சென்றனர்.   மனித இனத்தில் வெகு வேகமான வளர்ச்சிக்கு காரணம் நம்மை விட மிக அதிக அறிவுத் திறன் கொண்ட பிரபஞ்ச சக்திகள் நம்மை "செலக்டிவ் ப்ரீடிங்" செய்ததுதான் என்று எனக்கு தோன்றுகிறது.  ஓநாய்களில் எப்படி மனிதனுக்கு நட்பானவை தேர்ந்தெடுக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்ட‌தோ,  அது போலவே பிரபஞ்ச சக்திகளால் உயர்ந்த எண்ணம் கொண்ட‌ மனிதர்கள் (தர்மவான்கள்) தேர்ந்தெடுக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டார்கள் என்று எண்ணுகிறேன். 

மேலும் இந்து மத கோட்பாடுகள் டார்வின் தியரிக்கு எந்த விதத்திலும் எதிரானது அல்ல.  அது 6000 வருடங்களில் உலகம் தோன்றியது என்றோ,   மனிதன் பூமியில் நேரிடையாக மண் துகளில் இருந்து படைக்கப்பட்டான் என்றோ கூறவில்லை.  மாறாக "ஹிரன்யகர்ப"  எனும் தங்க கருவரையில் இருந்து படைப்பு தோன்றியதை அது குறிக்கிறது.   இது இன்றைக்கு நிலவும் "பிக்பாங்க்" தியரியோடு ஒத்து போகிறது.  தசவதாரத்தின் கோட்பாடுகள் பரினாம தத்துவத்தை சித்தரிக்கின்றன.  மேலும் எண்ணற்ற ஜீவாத்மாக்களின் கோட்பாட்டை  இன்றைய‌ நவீன விஞ்ஞானத்தின் "ஸ்ட்ரிங் தியரி"  கோட்பாடு மிகவும் ஒத்து இருக்கிறது.  மேலும் புனித புத்தகங்களுக்குள் புதைந்து போகாமல் அறிவை உரசி,  தேடுதலை தொடுத்து,  எல்லையற்ற தன்மைக்கு மாறுவதையே இந்து மத கோட்பாடுகள் வலியுறுத்துகின்றன.

#Nnsdharma
#Nnsindia

படித்துவிட்டு பகிருங்கள் நண்பர்களே ...

ропுрод்родрод்родை родொроЯроЩ்роХிропродு роиாроо் роЕро▓்ро▓. роироо் ро╡ிро░ுрок்рокрооுроо் роЕро▓்ро▓....

யுத்தத்தை தொடங்கியது நாம் அல்ல. நம்
விருப்பமும் அல்ல....

      பலர் என்னை பார்த்து கேட்கும்
கேள்விகள்,
ஏன் என் மனசாட்சியும் என்னை பார்த்து
இதை கேட்பதுண்டு.
எதற்காக மத ரீதியான பதிவுகளை
இட வேண்டும்?
எதற்காக மற்ற
மதத்தவரின் ஈனச் செயல்களை எதிர்த்து,
அற்பமான மனிதர்களோடு வாக்கு வாதம்
செய்துக் கொண்டிருக்க வேண்டும்?.
எதற்காக இந்த அற்பமான மனிதர்களுக்கு நடுவே
இருக்கும் பல நல்லவர்களையும் எதிர்க்க வேண்டும்?
நல்ல விஷயங்களை குறித்து எழுதலாமே?
நம்
தர்மங்களை குறித்து எழுதலாமே?
நம் உயிரினும்
மேலான தேசத்தில் இருக்கும் யாருக்கும்
தெரியாத அற்புதமான மனிதர்களை குறித்து
எழுதலாமே?
பலரின் எதிர்ப்பார்பில்லாத சேவைகளை
பாராட்டி எழுதலாமே?
இப்படி பல பல கேள்விகள்
இந்த கேள்விகள் வரும்
பொழுதெல்லாம் என்னுள்ளும்,
உங்களுள்ளும் உரைந்திருக்கும் இறைவனே உள்ளுனர்வாய்
பதில் தருகிறான்.

     இதே சூழ்நிலைதானே அர்ஜுனனுக்கு?
கௌரவர்கள் பக்கம்
கேடு கெட்ட மனிதர்கள் இருக்கிறார்கள்.

ஆனால் பீஷ்மர்,
துரோனர்,
கர்ணன் போன்ற பல
நல்லவர்களும் இருக்கிறார்கள்.

பாண்டவர்கள்
சமாதனத்திற்காக எத்தனையோ முயற்சி எடுத்தும்
யுத்தத்திற்கு ஆசைப்பட்டது கௌரவர்கள் தான்.
இங்கே
இறைவன் சொல்வது இதுதான்.
"பல
தீயவர்களுக்கு எதிராக சில நல்லவர்கள் இருந்தால்
அவர்களையும் எதிர்த்து நீ போராடிதான் ஆகவேண்டும்,
நல்லவர்களின் முழுமுதல் கடமை தீமையோடு சேராது
இருப்பது" .

தீமையோடு சேர்ந்துக் கொண்டு நான்
மட்டும் நல்லவன் என்று சொன்னால்,
அது சரியாகாது.
நீ யார் என்பது முக்கியமல்ல,
நீ
யாரோடு இருக்கிறாய் என்பதுதான் முக்கியம்!!

இன்று இந்த தேசத்தில் ஹிந்துக்களுக்கும் அதே
நிலைதான்.
இந்த யுத்தம் ஹிந்துக்களால்
தொடங்கப்பட்டதல்ல.
கேடுகெட்ட பல
அந்நிய சக்திகளால் தொடங்கப்பட்டது.
யார் வீட்டுக்கும் போய் கதவை தட்டி என் ஆண்டவன்
உன்னை அழைக்கிறார் என்று நாம்
சொல்லவில்லை.

உங்கள் கடவுள் எல்லாம்
காலாவதி ஆகிவிட்டனர் ஆகையால் என்
ஆண்டவன் ஒன்றே சத்தியம் என்று நாம்
சொல்லவில்லை.
கற்சிலைகள் வழிகெடுக்கும்,
என் இறைவனே
அளப்பெரியவன் என்று நாம் பிரச்சாரம்
செய்யவில்லை.
படைத்தவனை விட்டு விட்டு
படைப்புகளை வணங்காதே என்று நாம் மற்றவர்களின்
அடிப்படை சித்தாந்தம் தெரியாமல்
உளறவில்லை.
பணத்தை நாம் இறைக்கவில்லை. ஏழ்மையை
நாம் பயன்படுத்தவில்லை.
பெண்களை
கொண்டு ஆள்பிடிக்கவில்லை. பெண்களை
தந்திரமாய்பிடிக்கவும் இல்லை.
மூளை சலவை
செய்யும் ஈனமான
முயற்சிகளில் இறங்கவுமில்லை. இப்படி எதுவுமே நாம்
செய்யவில்லை.

உலகமெங்கும் “தனதே
உண்மை, மற்றதெல்லாம் வீண்”, என்ற
கேடுகெட்ட நம்பிக்கையை கொண்ட இந்த
இரு கூட்டங்களும் மனித இனத்திற்கு ஏற்படுத்தியுள்ள
இழப்பு கணக்கில் அடங்காது.

இழந்த உயிர்கள்
எண்ணிக்கையில் அடங்காது.
ஆனால் இந்தியாவில் நம் தர்மத்தை எதிர்த்து இந்த
இரு கூட்டங்களும் ஒன்று கூடியுள்ளன.

இந்தியாவுக்குள் மட்டுமே இந்த கூட்டனி, இந்திய
எல்லைகளை தாண்டினால் இவை இரண்டும் பரம
எதிரிகள். இந்த விஷக் கூட்டனியை எதிர்த்து போராடுவது
நம் கடமை. சொல்லப்போனால் நமக்கு வேறு
வழியே இல்லை.
யுத்தம் என்று வந்துவிட்டால் அதில்
நம் விருப்பு வெறுப்பு என்று எதுவுமில்லை.
தொடங்கியது நாம் அல்ல.
வன்முறை நம்
வழியும் அல்ல. தர்மமே நம் ஆதாரம். தர்மமே நம்
நோக்கம்.
தர்மமே நம்மை வழி நடத்திச் செல்லும்.
தர்மத்தை காப்பாற்றுபவனை தர்மம் காக்கும்.
இது
பொய்க்காத வேத சத்தியம்.

அதர்மத்தை எதிர்த்து போராடுவதை விட சிறந்த தர்மம்
இல்லை.

நீங்கள் தர்மத்தின் பக்கம் இல்லாது இருந்தால்,
அதர்மத்தின் பக்கத்தில் இருக்கிறீர்கள்.
யுத்தத்தில் நடுநிலை என்பதே இல்லை.

#Nnsdharma

தயவுசெய்து பகிருங்கள் நண்பர்களே ...

Tuesday, 15 November 2016

родрооிро┤ா! роиீ рокேроЪுро╡родு родрооிро┤ா?

என் நண்பர்களின் தமிழா ? இது...

  தமிழா!
நீ
பேசுவது தமிழா?

அன்னையைத் தமிழ்வாயால்
‘மம்மி’ என்றழைத்தாய்…
அழகுக் குழந்தையை
‘பேபி’ என்றழைத்தாய்…
என்னடா,
தந்தையை
‘டாடி’ என்றழைத்தாய்…
இன்னுயிர்த் தமிழை
கொன்று தொலைத்தாய்…
தமிழா!

நீ
பேசுவது தமிழா?
உறவை ‘லவ்’ என்றாய்
உதவாத சேர்க்கை…
‘ஒய்ப்’ என்றாய் மனைவியை
பார் உன்றன் போக்கை…
இரவை ‘நைட்’ என்றாய்
விடியாதுன் வாழ்க்கை
இனிப்பை ‘ஸ்வீட்’ என்றாய்
அறுத்தெறி நாக்கை…
தமிழா!

நீ
பேசுவது தமிழா?
வண்டிக்காரன் கேட்டான்
‘லெப்ட்டா? ரைட்டா?’
வழக்கறிஞன் கேட்டான்
என்ன தம்பி ‘பைட்டா?’
துண்டுக்காரன் கேட்டான்
கூட்டம் ‘லேட்டா?’
தொலையாதா தமிழ்
இப்படிக் கேட்டா?
தமிழா!

நீ
பேசுவது தமிழா?
கொண்ட நண்பனை
‘பிரண்டு’ என்பதா?

கோலத் தமிழ்மொழியை
ஆங்கிலம் தின்பதா?
கண்டவனை எல்லாம்
‘சார்’ என்று சொல்வதா?
கண்முன் உன் தாய்மொழி
சாவது நல்லதா?
தமிழா!

நீ
பேசுவது தமிழா?
பாட்டன் கையில
‘வாக்கிங் ஸ்டிக்கா’
பாட்டி உதட்டுல
என்ன ‘லிப்ஸ்டிக்கா?’
வீட்டில பெண்ணின்
தலையில் ‘ரிப்பனா?’
வெள்ளைக்காரன்தான்
உனக்கு அப்பனா?
தமிழா!

நீ
பேசுவது தமிழா?