Monday, 18 July 2016

ро╡ாро╡ро░் роОрой்ро▒ рокொроп் роХродை! рокாроХроо்- 6 роЪுро╡ாрооிропே роЪро░рогроороп்ропрок்рокா!

வாவர் என்ற பொய் கதை!
பாகம்- 6
சுவாமியே சரணமய்யப்பா!

வாவர் சமாதிபற்றி பெரியோர்கள்
எம்.என்.நம்பியார் :-
      சென்னை சினிமாத் துறையிலுள்ள ஐயப்ப பக்தர்களுக்கு இவர் குருஸ்வாமி.
சிறந்த நடிகர் .
1942 முதல் சபரிமலை யாத்திரை செல்பவர்.
அவர் வாவர் பற்றி கூறியது.
"இதெல்லாம் சுத்த பொய்... வாவர்ங்கிற முஸ்லீம் எப்படி ஐயப்பனுக்கு நண்பராக இருந்திருக்க முடியும்?
மேலும் அந்த மாதிரி பெயரை வேற யாராவது கேள்விப் பட்டிருக்கோமா?
இதையெல்லாம் யோசிச்சு பார்க்கணும்.
அது மட்டுமல்ல 41- நாட்கள் விரதமிருந்து மாலை போட்டுக்கிட்டு இருமுடி கட்டிக்கிட்டு இஷ்டப்பட்டு சுவாமியை பார்க்கப் போற நேரத்துல
வாவர் சமாதியை பார்க்கறது நல்லதுதானா?
இதையாவது யோசிக்க வேண்டாமா?
நானோ என் கூட வாரவங்களோ போக மாட்டோம்.
அது சமாதிதான். நல்ல விஷயத்துக்கு- புனித விஷயத்துக்கு போகும்போது இப்படி சமாதியை பார்த்துவிட்டு போறது சரியில்லை என்றுதான் நான் சொல்லுவேன்". ....

பந்தள ராஜா:
     பந்தள ராஜா குடும்பத்தின் வாரீசுகளில் ஒரு முதியவர் கூறியது ...
" வாவர் என்ற முஸ்லீம் ஒருவர் சுவாமி ஐயப்பனுக்கு தோழராகவோ, சீடராகவோ இருந்த்தாக எந்த சரித்திர ஆவணமும் அரண்மனையில் இல்லை".

ஸ்ரீமத் சுவாமி மதுரானந்தஜி மகராஜ்:-
       1978_ல் அவர் கூறியது
"ஐயப்ப சுவாமிக்கும் வாவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
அங்கு நம் சுவாமி பக்தர்கள் செல்லக்கூடாது. அது ஒரு முஸ்லிம் சமாதி.
அங்கு இருக்கும் முஸ்லீம்கள் ஸ்ரீ ஐயப்பனை நம்பவமில்லை
எந்த விரதமும் இல்லை. கருவாடும் தின்பர்; மாட்டிறைச்சியும் தின்பர் ஐயப்பன்மார் அங்கு செல்வது தப்பு அவர்கள் கொடுக்கும் சாம்பலை வாங்கி நெற்றியில் போடுவது இதை விட தப்பு".

#Nnssastha

Sunday, 17 July 2016

ро╡ாро╡ро░் роОрой்ро▒ рокொроп் роХродை! рооூро▓ роиூро▒்роХро│ிро▓் ро╡ாрокро░ ро╕்ро╡ாрооி рокாроХроо்- 5 роЪுро╡ாрооிропே роЪро░рогроороп்ропрок்рокா!

வாவர் என்ற பொய் கதை!
மூல நூற்களில் வாபர ஸ்வாமி
பாகம்- 5
சுவாமியே சரணமய்யப்பா!

       ஸ்ரீ ஐயப்ப ஸ்வாமி பற்றிய
மூல நூல்.
"பூத நாதோ பாக்யானகம்" என்ற ஸ்ம்ஸ்கிருத நூல் ஆகும்.
இது பிரம்மாண்ட புராணத்தில் உட்பட்டது ஆகும்.

   மலையாளத்தில் இதன் மொழிப் பெயர்ப்பு கல்லறய்க்கல் கிருஷ்ணன் கர்தா அவர்களால் 1928-ல் வெளியானது.
இந்நூலின் பெயர் "பூதநாதோபாக்யானம்" (கிளிப்பாட்டு) என்பதாகும்.
இது பாடலாக உள்ளது.
இதுவே முதல் மலையாள நூல்.

    இரண்டாவதாக மூலநூலை தழுவி உரை நடையில் மலையாள மொழியில்
பி.என். கிருஷ்ணுண்ணி என்பவர் 1938-ல் ஸ்ரீ பூதநாதன் என்ற நூலை வெளியிட்டார்.

  மேற்கூறிய நூல்களில் வாபர சுவாமியைப் பற்றிகூறப்பட்டுள்ளது. ஆனால் வாவர் என்ற "முஸ்லிம்" பற்றி எந்த செய்தியும் இல்லை.

   1946-ல் வித்வான் குறுமள்ளூர் நாராயண பிள்ளை என்பவர் மலையாள மொழியில் பூதநாத ஸர்வஸ்வம் என்ற நூலை வெளியிட்டார்.
மேலும் 1984-ல் ஆசிரம்ம் தாமோதான் என்பவர் வெளியிட்ட ஐயப்ப சர்வஸ்வம் என்ற மலையாள நூல் 1988-ல் ஆஸ்திகமணி
A.சுப்பிரமணிய அய்யர் வெளியிட்ட ஐயப்பன் பெருமை என்ற தமிழ் நூல் முதலிய பல நூல்களை பரிசோதித்ததில் வாவர் பற்றிய கதை ஒரு இடைச் செருகல் என்பது தெளிவாகிறது.
1938- க்கும் 1946-க்கும் இடையில் சூர்ப்பன் கவி, பாண்டிச்சேவம், பந்தளச் சேவம், இளவர் சேவம், பாலாழி மதனம், ஈழச்சேவம், வாவரங்கம் என்னும் பெயர்களில் மலையாள மொழியில் பல சாஸ்தாப் பாடல்கள் பாடப்பட்டன.

     இவற்றில் சில வாவர் என்ற பொய்க் கதையை பரப்பின.
தற்காலத்தில் வியாபார நோக்கத்தில் சினிமாக்களும், சினிமா பாடல்களும் பொய்கதையை மேலும் பரப்பியிருக்கின்றன.

...தொடரும்...

#Nnssastha

அடுத்த பதிவில் வாவர் சமாதி பற்றிய பெரியோர்களின் கருத்தை பதிய முயல்கிறேன் ...

Saturday, 16 July 2016

ро╡ாро╡ро░் роОрой்ро▒ рокொроп் роХродை! рокாроХроо் -4 роЪுро╡ாрооிропே роЪро░рогроо் роРропрок்рокா!

வாவர் என்ற பொய் கதை!
பாகம் -4
சுவாமியே சரணம் ஐயப்பா!

   நமது பாரத நாடு பல நூற்றாண்டு காலம் முஸ்லீம்களுக்கும், கிறித்தவர்களுக்கும் அடிமைப்பட்டு கிடந்தது.
அக்காலத்தில் நம்நாட்டு மன்னர்கள் பல்வேறு நிர்பந்தங்களுக்கு பணிந்து கொடுக்க நேர்ந்த்து.

   அவ்விதமான ஏதோ ஒரு நிர்பந்த்த்திற்கு ஆளாகிய அக்கால பந்தள மன்னன் ஒருவர்
"அமீர்காதி செயினுதின் பஹதூர் பாவா பாவர் முஸலியார்"
என்ற முஸ்லீம் குடும்பத்திற்கு எருமேலியிலும் பதினென்டாம் படியிலும் பள்ளி வாசல் அமைத்து ஐயப்ப பக்தர்களிடம் நிதி வசூல் செய்துகொள்ள அனுமதித்து செம்பு பட்டயம் வழங்கினார்.
எருமேலி பள்ளிவாசல் சமாதி வைக்கப்பட்டுள்ள முஸ்லீமின் பெயர் பாபர் என்றும் பெதருதீன் என்றும் சிக்கந்தர்ஷா என்றும் அலியர் தங்கள் என்றும் பல் கருத்துக்கள் உள்ளன.
பள்ளி வாசல்களை அமைத்துக் கொண்ட முஸ்லீம்கள் ஜயப்ப பக்தர்களிடையே வாவர் என்ற பொய்கதையை பரப்பினார்கள்.
ஸ்ரீ ஐயப்ப ஸ்வாமி வாவர் என்ற முஸ்லீமை வெல்ல முடியாமல் தோழனாக்கிக் கொண்டதாகவும், வாவர் சமாதியில் வணங்கி விட்டுதான் சபரிமலைக்குச் செல்ல வேண்டுமென்றும் கதை கட்டினார்கள்.

நாளடைவில் கள்ளம் கபடமறியாத ஏமாளியாக்கப்பட்ட ஐயப்ப பக்தர்கள் வாபர சுவாமியை மறந்தார்கள்.

https://m.facebook.com/story.php?story_fbid=473367882842648&id=100005083216260&refid=17&_ft_=top_level_post_id.473367882842648%3Atl_objid.473367882842648%3Athid.100005083216260%3A306061129499414%3A2%3A0%3A1448956799%3A8135729999303591502&__tn__=%2As

   வாபரசுவாமிதான் பேட்டை சாஸ்தா என்பதை மறந்தார்கள்.

வாபர சுவாமிக்கு பதில் வாவர் சமாதியை கும்பிட ஆரம்பித்தார்கள்.
முஸ்லீம்களை திருப்திப் படுத்த புனித பள்ளிக்கெட்டில்
ஓம் சின்னத்திற்கு பதிலாக பிறைச் சின்னம் பொறித்துக் கொண்டார்கள்.

பக்தர்களின் பணம் பள்ளி வாசலில் கோட்டை கொட்டென்று கொட்டத் நொடங்கியது.
ஆண்டுதோறும் ஐயப்ப பக்தர்களின் இலட்சக்கணக்கான பணத்தைப் பெற்று அந்த பள்ளி வாசலும் முஸ்லீம் சமுதாயமும் உயர்ந்து கொண்டிருக்கிறது.

இதில் வேடிக்கை என்னவென்றால்:-

1) வாவர் சமாதியில் இருப்பவர்கள் உட்பட எந்த முஸ்லீமும் ஸ்ரீ ஐயப்பஸ்வாமியை நம்பவில்லை.
"நாங்கள் அல்லாவைத் தவிர வேறு யாரையும் நம்ப மாட்டோம்" என்கிறார்கள்.

2) கேரளத்து தேவஸ்வம் போர்டார் இந்துக்களின் இந்த ஏமாளித் தனத்தை
"இந்த முஸ்லீம் ஒற்றுமை" என்று கூறி பெருமைப் பட்டுக் கொள்கிறார்கள்.

3) ஐயப்பனை நம்பாமல், விரதமேதும் இல்லாமல், அசைவ உணவு உண்ணும் முஸ்லீம்களிடம் ஐயப்ப பக்தர்கள் திருநீர் பெற்றுக் கொள்கிறார்கள்.

       இந்த பொய்கதைக்கு இனியாவது முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும், ஸ்ரீ ஐயப்ப ஸ்வாமியின் வழிபாட்டு முறைகளை அர்த்தம் புரிந்து கடைபிடிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம் ...

...தொடரும் ...
#Nnssastha

அடுத்த பாகத்திலிருந்து மூல நூற்களில் வாபர ஸ்வாமி பற்றி...

Tuesday, 12 July 2016

ро╡ாро╡ро░் роОрой்ро▒ рокொроп் роХродைропுроо்... (роРропрок்рокрой்) ро╡ாрокро░ро╕்ро╡ாрооி роОрой்ро▒ рокேроЯ்роЯை роЪாро╕்родா...! рокாроХроо் -3

வாவர் என்ற பொய் கதையும்...
வாபரஸ்வாமி என்ற பேட்டை சாஸ்தா...!
பாகம் -3

    எல்லோரும் ஓய்வெடுத்துக்
கொண்டிருக்கும் போது வாபரன்
மன்னனை சந்தித்து அவரை வேறு
யாருமறியாமல் பொன்னம்பலமேட்டு
க்கு கூட்டிச்சென்று தர்ம
சாஸ்தாவிடம் சேர்த்தார்.
மன்னன் மீண்டும் உபதேசம் பெற்றார்.
எஞ்சியிருந்த சந்தேகங்களும் தீர்ந்து
தெளிவு பெற்றார் மன்னன்.

    வாபரன் மீண்டும் யாருமறியாமல்
மன்னனை பரிவாரங்கள் தூங்குமிடத்தில்
கொண்டு சேர்த்தார்.
பந்தள மன்னன் ஸ்ரீ ஐயப்பனின் கட்டளையின் படியும் அகஸ்திய முனிவரின் உபதேசங்களின் படியும் முதலில் எருமேலியில்
வாபரனுக்கும் பின்
சபரிமலையில் ஸ்ரீ ஐயப்பனுக்கும் மஞ்சள் மாதாவிற்கும் கோயில்கள் அமைத்து பிரதிஷ்டை செய்து உற்சவமும் நடத்தினார்.

   எருமேலியில் அமைக்கப் பட்டுள்ள கோயில்
பேட்டை சாஸ்தா கோயில் என்றழைக்கப் படுகிறது.
பேட்டை சாஸ்தா என்பது
"வாபர ஸ்வாமி"
என்ற பூதத் தலைவன் ஆவார்.

   அன்று முதல் தன்னை வணங்கி பேட்டை துள்ளி காடு வழியாக சபரிமலை செல்லும் பக்தர்களை வன விலங்குகளிலிருந்து காப்பாற்றி கானகம் கடக்க துணை செய்து வருகிறார் வாபரஸ்வாமி.

...தொடரும் ...

#Nnssastha

...

Sunday, 10 July 2016

роороХாрокாро░родрод்родிро▓் роЕрогு рокро▒்ро▒ிроп родроХро╡ро▓்роХро│் ..! роиро╡ிрой роЙро▓роХிрой் рооுродро▓் роЕрогுроХுрог்роЯு !

மகாபாரதத்தில் அணு பற்றிய
தகவல்கள் ..!
மஹாபாரதத்தின் விஞ்ஞான
மகத்துவங்கள் !!!

நவின உலகின் முதல் அணுகுண்டு !
    அப்படியென்றால்

      ஓப்பன்ஹீமர் யார் என்று நம்மில்
பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை
அணுகுண்டின் தந்தை என்று அழைக்கப்படும்
அமெரிக்க கோட்பாட்டு இயற்பியல் வித்தகரும்
(theoritical physicist) மற்றும் கலிபோர்னிய
பல்கலை கழகத்தில் பேராசிரியருமான இவர்,

இரண்டாம் உலகப் போர் சமயத்தில், "மன்ஹாட்டன் பராஜக்ட்"
எனப்படும் ஆய்வில் மிகப்பெரும்
பங்காற்றினார்.
இந்த ஆய்வின் மூலமாகதான்
அமெரிக்கா முதன் முதலில்
அணு ஆயுதங்களை உருவாக்கின. இதன்
தொடர்ச்சியாக, ஜூலை 16, 1945ல் முதன் முதலில்
நியூ மெக்சிகோ எனும் இடத்தில்,
இப்படி உருவாக்கப்பட்ட
ஒரு அணு குண்டு
"ட்ரினிட்டி" என பெயரிடப்பட்ட
சோதனையின் மூலமாக, வெடிக்கப்பட்டது.
பின்னர்
இதன் தொடர்ச்சியாய் ஜப்பானோடு நடந்த
யுத்தத்தில் ஹிரோஷிமா, நாகசாகி ஆகிய
நகரங்களின் மேல் வீசப்பட்ட இந்த குண்டுகளால்,
ஜப்பான் நிலைக்குலைந்து சரணடைந்தது.
உலகில்
உள்ள அனைத்து விஞ்ஞானிகள், அறிஞர்கள் மற்றும்
அனைத்து மனிதர்களையும் இது அதிரவைத்தது,
கோட்பாட்டு இயற்பியலின் சக்தி உலகம் முழுதும்
பேசப்பட்டது.

அமெரிக்கர்கள்
ஓப்பன்ஹீமரை சரித்திர நாயகனாக கொண்டாடினர்.
வானொலி மற்று தொலைக்காட்சிகளில் அவர்
பேட்டிதான்.
அனைத்து செய்தித்தாள்களும் அவர்
புகைப்படத்தை தாங்கி வெளிவந்தன.

ஓப்பன்ஹீமர் மெக்சிக்கோவில் நடத்தப்பட்ட அந்த
" ட்ரினிட்டி "
என பெயரிட்டப்பட்ட குண்டுவெடிப்பின்
போது நிகழ்ந்த அணு ஆற்றல்
வெளிப்பாட்டை குறித்து ஒரு பேட்டியில் கூறும்
போது.
"அது வெடிக்கும் போது,
அது எனக்கு பகவத் கீதை அத்யாயம் 11, ஸ்லோகம்
12 ஐ ஞாபகப் படுத்தியது என்றார்.
    
    "ஆகாயத்தில் ஆயிரக்கணக்கான சூரியர்கள்
ஒரே காலத்தில் உதயமானால் எத்தகைய ப்ரகாசம்
ஏற்படுமோ அந்த பிரகாசம் விஸ்வரூப
பரமாத்மாவின் ப்ரகாசத்திற்கு ஒருகால் நிகராக
இருக்கக்கூடுமோ ?" - பகவத் கீதை [11 : 12]

பின்னர்
"அணு ஆயுதங்கள் உருவாக்கம்"
எனும்
தலைப்பில் பல்கலை கழகங்களுக்கான
ஒரு கருத்தரங்கில் ஒரு மாணவர், ஓப்பன்ஹீமரிடம்
கேட்டான்.

"இது இந்த பூமியில் வெடிக்கப்பட்ட
முதல் குண்டா" என்று.

ஓப்பன்ஹீமர்
"ஆம் நவீன உலகின் முதல் குண்டு"
என்றார்.

பல அறிஞர்கள் இந்த
பதிலை கேட்டு திகைத்தனர். நவீன உலகின் முதல்
குண்டென்றால்,
பூமியின் வரலாற்றில்
வேறு குண்டுகள் வெடிக்கப்பட்டுள்ளனவா ?

ஓப்பன்ஹீமர் மஹாபாரதத்தில் அணு ஆயுதங்கள்
பயன்படுத்தப்பட்டுள்ளன என்று உறுதியாக
நம்பினார். மஹாபாரதத்தில் சித்தரிக்கப்பட்டுள்ள
நிகழ்வுகள் ஒரு அணுகுண்டு வெடிக்கையில்
எத்தைகைய செயல்பாடுகள் நிகழ்கிறதோ,
அதை அப்படியே படம் பிடித்து காட்டுவதை போல்
இருப்பதுதான் அவர் நம்பிக்கைக்கு காரணமாக
இருந்தது.
1965ல் மற்றொரு தொலைக்காட்சி நேர்கானலில்
அவர் சொல்கிறார்

"நமக்கு தெரியும் இனி இந்த
உலகம் (குண்டு வெடிப்புக்கு பின்) பழைய
படி இல்லை என்று,
சிலர் சிரித்தார்கள், சிலர்
அழுதார்கள், சிலர் அதிர்ந்து போய் அமைதியாய்
இருந்தார்கள்.

நான் ஹிந்துக்களின் பகவத்
கீதை ஸ்லோகம் [11:32] ஐ நினைவுப் படுத்திக்
கொண்டேன்.
அதில் பகவான்
விஷ்னு ஒரு இளவரசனை சமாதானப்படுத்தி தன்
கடமையை செய்ய பல கரங்களை கொண்ட
ஒரு பிரமாண்ட தரிசனத்தை எடுத்து 'நான்
உலகங்கள் அனைத்தையும் அழிக்கின்ற,
பெருகி வளர்ந்துள்ள மஹாகாலனாக இருக்கிறேன்'
என்கிறார்.
நாம் எல்லோரும் அவ்வாறுதான்
ஒரு வகையில் நினைத்திருக்கக் கூடும்".

     மஹாபாரதத்தில் அணுகுண்டுகள் வெடிக்கப்பட்ட
நிகழ்வுகளை சித்தரிக்கும் சம்பவங்கள் நிறைய
உள்ளன.
" பிரம்மாஸ்திரம் "என்றும் " பிரம்ம
ஷீரா "
என்றும் "பிரம்ம தண்டா "
என்றும்
பலவிதங்களில், பல ஆற்றல் நிலைகளில்
அணுபிரயோகம் செய்யப்பட்டுள்ளன. பிரபஞ்ச
சக்திகள் நம்மை விட மிக மேம்பட்ட
தொழில்நுட்பத்தை உடையவர்கள் ஆகையால்,
அணுபிரயோகத்தை கூட செம்மையாக
பயன்படுத்தும் நுட்பத்தை கொண்டனர் ...
#Nnsindia
புகழ் அனைத்தும்
சர்வம் கிருஷ்ணார்ப்பணத்கே ....

роЖрогுро▒ைропோ... рокெрог்рогுро▒ைропோ... роЕро╡роЪிропрооெройிро▓் роЕрогிрои்родுрод் родொро▓ைропுроЩ்роХро│்!!!

ஆணுறையோ...
பெண்ணுறையோ...
அவசியமெனில் அணிந்துத் தொலையுங்கள்
தேவை முடிந்தபின்பு - நடுத்
தெருவில் போடாதீர்கள்
அரும்புகளும் அதைக்கண்டு
அர்த்தம் தேடித் தவிக்கிறது......

மாதவிடாய் என்பது - பெண்
மகத்துவத்தில் ஒன்றாகும்
வீதியில் போட்டு நீங்களும் - அதனை
விளம்பரம் செய்யாதீர்
நெகிழிப்பையில் முடித்து
குப்பையலிட மறவாதீர்......

இரவுகென்றுப் பல உடைகள்
விருப்பம்போல் அணியுங்கள்
ஆனால் அறிவின்றி அதனோடே
சந்தைவரை செல்லாதீர்
ஆடவரைத் தூண்டாதீர்....

பொதுக் கழிப்பிடங்கள்
போதுமானவரை உண்டு - இனியும்
மூச்சடைக்க வைக்காதீர்
விலங்கினம் போல் வீதியிலே கழிக்காதீர்......

சின்னஞ்சிறு குழந்தைகளும்
உண்டுக் களிக்கிறது பலகாரம்
தள்ளுவண்டித் தோழமைகளே
கைகள் சுத்தம் செய்ய மறவாதீர்
குழந்தைகளைப் பேணத் தவறாதீர்....

வீசும் குப்பைக் காற்றில் பறந்து
வாகன ஓட்டியின் மேல் விழுந்து
நிலைத்தடுமாறி விபத்துகளும் நிகழக்கூடும்
குப்பைகளைத் தொட்டியில் போடப் பழகிடுவீர்.....

நன்மைக்கென்றுப் புரிந்திடுவீர் - நம்
செல்வங்களின் நலன்கருதி நடந்திடுவீர்
பாதிக்கப்படுவோரில் நாமும் அடக்கம் - எனவே
சுகாதாரம் கடைபிடிப்பீர் - நம்
சுற்றுப்புறம் காத்திடுவீர்....

(நாசூக்கா சொல்லத் தெரியலங்க.... சில கன்றாவிகள சகிக்க முடியலங்க....)
#Nnsindia
உங்கள் நலன் விரும்பி
ஒரு நண்பர்

Saturday, 9 July 2016

роЗро░рог்роЯாропிро░роо் роЖрог்роЯு рокро┤рооைропாрой роЗрои்родுро╕்родாройிрой் (роХроЯ்роЯிроЯроХро▓ை) родொро┤ிро▓்роиுроЯ்рокроо் !!!

இரண்டாயிரம் ஆண்டு பழமையான இந்திய(கட்டிடகலை) தொழில்நுட்பம் !!!

     இன்றைக்கு செயற்கைகோள்கள் இருக்கின்றன.
ரமணன் இருக்கிறார், வானிலை எச்சரிக்கையை
சொல்ல. அன்றைக்கு இரண்டுமே இல்லை.
ஆனால், தாமிரபரணியில் நமது முன்னோர்கள்
அந்தக் காலத்திலேயே வெள்ள அபாயங்களை
அறிவியல் பூர்வமாக அறிந்துக்கொண்டா
ர்கள். அதுதான் வெள்ள அபாயத்தை முன்னரே
அறிவிக்கும் சங்கு கல் மண்டபம்.

தாமிரபரணி ஆற்றின் மையத்தில் சங்கு கல்மண்டபம்
அமைக்கப்பட்டிருக்கிறது. மூன்று பக்கம்
திறந்தவெளியுடனும் தண்ணீர் வரும் எதிர் பக்கம்
மட்டும் கல்சுவரால் அடைக்கப்பட்ட மண்டபம் அது.
அதன் உச்சியில் சங்குபோன்ற அமைப்பு உள்ளது. ஆற்றில்
வெள்ளம் வரும்போது அந்த மண்டபத்துக்குள்
குறிப்பிட்ட அளவுக்கு மேல் நீர் மட்டம் உயர்ந்தால்,
வெள்ளத்தின் இரைச்சலால் காற்று
உந்தப்பட்டு அந்த சங்கு மிக சத்தமாக ஊதப்படும்.
இதுதான் வெள்ளம் வரப்போகிறது
என்பதற்கான அபாய அறிவிப்பு. இதன் மூலம்
மக்கள் வெள்ள அபாயத்தை உணர்ந்து
பாதுகாப்பாக இடம் பெயர்வார்கள்.

சங்கு இருக்கும் உயரத்துக்கு நீர்மட்டம் உயர உயர
சங்கின் சத்தமும் அதிகமாகிக் கொண்டே
போகும். ஒரு கட்டத்தில் சங்கின் ஒலி திடீரென்று
நின்றுவிடும். அப்படி நின்றுவிட்டால் சங்கு
மட்டத்திற்கு நீர் வந்துவிட்டது; ஆற்றின் கரையைக் கடந்து
ஊருக்குள் வெள்ளம் நுழைந்துவிட்டது என்று
அர்த்தம். பாதுகாப்பாக மண்டபத்தில்
தங்கியிருக்கும் மக்கள் இதை அறிந்து
கொள்வார்கள்.

நீர்மட்டம் குறையும்போது மீண்டும் சங்கு ஒலிக்கத்
துவங்கும். அப்போது மக்கள் அபாயக் கட்டத்தில்
இருந்து மீண்டு விட்டோம். வெள்ளம் வடியத்
தொடங்குகிறது என்று தெரிந்து
கொள்வார்கள். சங்கின் ஒலி
கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து
அடங்கிவிடும். இது வெள்ள அபாயம் நீங்கியது
என்பதற்கான அறிகுறி. மக்கள் தங்கள் இயல்பு
வாழ்க்கைக்கு திரும்புவார்கள்..

பல கிராமங்களை வெள்ளத்தில் இருந்து
காப்பாற்றிய சங்கு கல்மண்டபங்கள் இன்று
அழிந்து போய்விட்டன. ஒரு சில இடங்களில் மட்டும்
இந்த மண்டபங்கள் இருக்கின்றன. ஆனால்,
ஆற்றில் வெள்ளம் வரும்போது அபாய ஒலி
எழுப்பும் அளவிற்கு வேலை செய்கிறதா என்று
தெரியவில்லை..

#Nnsindia

ро╡ாро╡ро░் роОрой்ро▒ рокொроп் роХродை! рокாроХроо்- 2

வாவர் என்ற பொய் கதை!(ஐயப்பன்)
பாகம்- 2

    புலிக் கூட்டங்களுடன் பந்தளம் திரும்பிய ஐயப்பன் பந்தள மன்னனுக்கு ஆன்மீக உபதேசம் அருளினார். தமக்கும்(தர்மசாஸ்தா) வாபரனுக்கும் (பேட்டை சாஸ்தா) வித்தியாசமில்லையென்று கூறினார்.
எருமேலியில் வாபரனுக்கு ஒரு கோயில் அமைக்குமாறும் பணித்தார்.
பின் ஒரு அம்பு எய்தார்.
அந்த அம்பு விழுந்த இடத்தில் தமக்கு
18 தத்துவ படிகளுள்ள ஒரு கோவிலும் இடதுபக்கம் சற்று தள்ளி மஞ்சள் மாதாவுக்கு ஒரு கோவிலும் கட்டுமாறு கட்டளையிட்டு விட்டு மறைந்தார்.

    அதன்படி பந்தளமன்னன் பரிவாரங்களுடன் புறப்பட்டுச் சென்றார்.
எல்லோரும் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் போது வாபரன் மன்னனை சந்தித்து அவரை வேறு யாருமறியாமல் பொன்னம்பலமேட்டுக்கு கூட்டிச்சென்று தர்ம சாஸ்தாவிடம் சேர்த்தார்.
மன்னன் மீண்டும் உபதேசம் பெற்றார்.
எஞ்சியிருந்த சந்தேகங்களும் தீர்ந்து தெளிவு பெற்றார் மன்னன்.

  வாபரன் மீண்டும் யாருமறியாமல் மன்னனை பரிவாரங்கள் தூங்குமிடத்தில் கொண்டு சேர்த்தார்.

... தொடரும் ...

#Nnssastha

...

Thursday, 7 July 2016

ро╡ாрокро░ро╕்ро╡ாрооி роОрой்ро▒ рокேроЯ்роЯை роЪாро╕்родா! рокாроХроо்-1

வாபரஸ்வாமி என்ற பேட்டை சாஸ்தா!
பாகம்-1
          சுவாமி ஐயப்பன் ராணியின் சூட்சியால் புலிப்பால் கொண்டு வருவதற்கு புறப்பட்டார்.
வனத்தின் எல்லையாகிய எருமேலியில் சிவபெருமான் அனுப்பிய
பூதகணங்கள் "வாபரன்" என்ற பூதத் தலைவனின் தலைமையில ஸ்ரீ ஐயப்பனை சந்தித்து வணங்கி நின்றனர்.
ஸ்ரீ ஐயப்ப சுவாமிக்கு மகிஷி ஸம்ஹாரம் செய்ய அவை உதவியாக நின்றன.
பின் ஐயப்பன் புலி கூட்டங்களுடன் பந்தளம் திரும்பினார்.
பூதகணங்கள் வனத்தின் எல்லை வரை உடன் வந்து வழியனுப்பினர்.

     அப்போது
ஸ்ரீ ஐயப்பன் வாபரனை அழைத்து வனத்தின் எல்லையான எருமேலியில் தங்கியிருக்குமாறும் தன்னை தரிசிக்க காடு வழியாக சபரிமலை வரும் பக்தர்களை கொடிய வன விலங்குகளிலிருந்து காத்து வருமாறும் கட்டளையிட்டார்.
... தொடரும் ...

#Nnssastha

...